- Advertisement -
தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான மானமதி ஏரி, தையூர் ஏரி உள்ளிட்டவை ஏற்கனவே நிரம்பியுள்ளன.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரிகள் உடைப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
- Advertisement -