துவாரக் ராஜா எழுதி இயக்கிய ஆக்ஷன் க்ரைம் நாடகமான பரோல், இன்று நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ள இப்படம் விமர்சகர்கள் மற்றும் பாராட்டுகளை பெற்று வருகிறது. பொது பார்வையாளர்கள். படம் பற்றி நான்கு நடிகர்கள் கூறியது இதோ…
பீச்சங்காய் புகழ் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கூறும்போது, “ஒரு தாய்க்கும் அவளுடைய இரண்டு மகன்களுக்கும் இடையிலான உணர்ச்சி ஆழம் பற்றிய படம். வடசென்னையைப் பின்னணியாகக் கொண்ட கதைகள் எப்போதும் தீவிரமானவை. இந்த படத்தின் கான்செப்ட் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
பரோல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிங்கா மற்றும் ஆர்எஸ் கார்த்திக் நடித்துள்ளனர். பரோல் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்களே. படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
அண்ணன் லிங்கா மற்றும் தம்பி கார்த்திக் இருவரும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும் அண்ணன் தம்பிகளாக உள்ளனர். லிங்கா முக்கிய குற்றவாளியாக சிறையில் உள்ளார், இவரது அம்மா எதிர்பாராத விதமாக இறந்துவிட தம்பி கார்த்திக் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பரோல் கிடைத்ததா? இல்லையா? என்பதே பரோல் படத்தின் கதை. கார்த்திக் மற்றும் லிங்கா இருவருக்கும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதையாக பரோல் படம் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி இருவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு பெண் கதாபாத்திரங்களும், படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியதும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பரோல் கிடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உண்மைக்கு சற்று விலகாமல் கதையிலும் புகுத்தி உள்ளார் இயக்குனர் துவாரக் ராஜா. படத்தில் திரைக்கதை பரோல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. வடசென்னை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் பரோல் படம் அதில் தனித்துவமான உள்ளது. ஆக்சன் காட்சிகளும் சரி, சென்டிமென்ட் காட்சிகளும் சரி சிறப்பான முறையில் திரையில் காட்டப்பட்டுள்ளது. நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த கதையை ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்துள்ளார் இயக்குனர், இப்படி பட்ட கதையை சரியான சரியான முறையில் எடிட் செய்த எடிட்டருக்கும் தனி பாராட்டுக்கள்.
படத்தின் கேமரா ஒர்க், பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. செட் ஒர்க் இல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கி படத்தை எடுத்துள்ளனர். கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் ஹியூமர் பல இடங்களில் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சி பிரமாதம். படத்தின் பட்ஜெட் கருதி சில காட்சிகளை தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை கதைக்கு எந்தவித தொய்வையும் ஏற்படுத்தவில்லை. அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் சண்டை பலருக்கும் ஒத்து போகும்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் உடைந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் பெரும் உறுதுணையாக இருந்தார். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் தங்களின் குணாதிசயங்களின் சாராம்சத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.