தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க விழாவை கிராந்திவீர சங்கொல்லி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரையும் சென்னையையும் இணைக்கிறது.ரயில்வேயின் ‘பாரத் கௌரவ்’ ரயில் கொள்கையின் கீழ் கர்நாடகாவின் முஸ்ராய் துறையால் இயக்கப்படும் ‘பாரத் கவுரவ் காசி தர்ஷன்’ ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
“காசி யாத்திரை மேற்கொள்ள விரும்பும் ஏராளமான பயணிகளின் கனவை இது நிறைவேற்றும்” என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் யாத்ரீகர்களுக்கு தள்ளுபடி விலையில் எட்டு நாள் சுற்றுலாப் பொதியை வழங்குகிறது.
காசி விஸ்வநாதர் யாத்திரை பக்தர்களுக்கு கர்நாடக அரசு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ரயில் வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித இடங்களை உள்ளடக்கியது.