- Advertisement -
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வெள்ளிக்கிழமை வழங்கினார். விழாவில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவர்கள் உட்பட மொத்தம் 2,314 பேருக்கு மோடி பட்டங்களை வழங்கினார்.
“இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கு எனது செய்தி என்னவென்றால், நீங்கள் புதிய இந்தியாவின் தூண். இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு உங்களிடம் உள்ளது” என்று பட்டமளிப்பு விழாவில் இளைஞர்களை மோடி உற்சாகப்படுத்தினார்.
- Advertisement -