Friday, March 29, 2024 9:21 pm

தலைமறைவான 32 வயது நபர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரை போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த 32 வயது நபர், திங்கள்கிழமை துபாய் வழியாக ஸ்காட்லாந்துக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். திங்கள்கிழமை அதிகாலை விமானத்தில் ஏற இருந்த பயணிகளின் பயண ஆவணங்களை சோதனை செய்தபோது, அவர்களில் ஒருவரான மதுரையை சேர்ந்த ராஜா பிரபு மதுரை அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வருவதை குடியேற்ற அதிகாரிகள் கவனித்தனர். உடனே அவரை தடுத்து நிறுத்தி பயணத்தை ரத்து செய்தனர். செப்டம்பர் மாதம் ராஜா பிரபு மீது வரதட்சணை வழக்கு தொடரப்பட்டது. ஆனால் போலீசார் அவரை கைது செய்யும் முன், அவர் தலைமறைவானார். இதையடுத்து, அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. ராஜபிரபுவை கைது செய்து சிறையில் அடைக்க மதுரையில் இருந்து தனிப்படை சென்னை வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்