பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
கோட்கி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் முகாமில் டஜன் கணக்கான குற்றவாளிகள் நுழைந்து, ஏழு போலீஸ் அதிகாரிகளைக் கொன்று 20 பேரைக் கடத்திச் சென்ற சம்பவம் நடந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு கடத்திய பலரை விடுவிப்பதற்காக குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இப்பகுதியில் முகாம் நிறுவப்பட்டது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த பகுதி, மக்கள் நடமாட்டம் குறைந்த இடமாகவும், கொள்ளை, இலக்கு கொலைகள், கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்களின் வலுவான மறைவிடமாகவும் உள்ளது.