தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த நாகப்பாம்பு பொதுமக்களால் கொல்லப்பட்டது.
தாம்பரம் தாலுகா அலுவலகம் ஜிஎஸ்டி சாலையில் சானடோரியம் அருகே உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது.
அறைக்குள் இருந்த ஊழியர்களும், மக்களும் அலறியடித்து அங்கிருந்து சிதறி ஓடினர். உடனே, சிலர் மரக் கட்டைகளை எடுத்து வந்து தாக்கியதில், பாம்பு இறந்து விட்டது.
பாம்பு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாலுகா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பாம்பை கொல்ல தங்களுக்கு உரிமை இல்லை என்றும், அது குற்றம் என்றும், ஏழு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பலாம் என்றும் கூறினர்.
வெள்ளிக்கிழமைகளில் நாகப்பாம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கூறிவிட்டு, அருகில் இருந்த கடையில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்து வந்து இறந்த பாம்பின் மீது ஊற்றினர்.