வார இறுதியில் ‘பிக் பாஸ் தமிழ் 6’ பார்வையாளர்கள் ஏற்கனவே கமல்ஹாசன் தோன்றி சில போட்டியாளர்களைக் கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரத்தில் இந்த வாரம் 19 போட்டியாளர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளதுஇந்த வாரம் நாமினேஷனில் ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா ஆகிய ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் அசல் கோலார் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார் என தெரியவந்து உள்ளது
எனவே அவர் இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அசல் கோலாரை அடுத்து மகேஸ்வரி மற்றும் ஏடிகே ஆகிய இருவரும் அடுத்தடுத்து குறைந்த வாக்குகள் பெற்று கொள்வதாக தெரிகிறது
மேலும் இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்றவர் ஜனனி என்றும் அவருக்கு சுமார் 35 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்திருக்க இருக்கும் நிலையில் அந்த நபர் அசல் கோளாறா அல்லது வேறு நபரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சுவாரஸ்யமாக அசலும் சிங்கப்பூர் மாடல் நிவாஷினியும் காதல் உறவைத் தொடங்கியுள்ளனர், மேலும் பல போட்டியாளர்களும் அதைப் பற்றி விவாதித்தனர். இந்த வாரம் அசால் வெளியேறுகிறது விஜய் டிவி காதல் காரணியை இழக்கும். ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.