Thursday, April 25, 2024 2:16 pm

மடிப்பாக்கம் அருகே மின்விளக்கு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பொறியாளர் உயிரிழந்தார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மடிப்பாக்கம் அருகே மின்விளக்கு கம்பத்தை செவ்வாய்க்கிழமை தொட்டபோது மின்சாரம் தாக்கி மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தார்.

இறந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இளவரசன் (33) பள்ளிக்கரணையில் தங்கி தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு இளவரசன் தனது நண்பர் அலெக்சாண்டருடன் வேளச்சேரி மெயின்ரோட்டில் உள்ள சாலையோரக் கடையில் இரவு உணவு சாப்பிடச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இளவரசன் தவறுதலாக சாலையில் இருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாகவும், சிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். உடனடியாக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசன் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற மடிப்பாக்கம் போலீஸார், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்