தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை பட்டாசு வெடித்தல் மற்றும் விற்றது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை 354 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்ததற்காக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகளை அமைத்தவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவை மீறியதற்காக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. சீனத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என காவல்துறை அறிவுரை கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் இரவு 7 மணி மற்றும் இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.