நடிகர் அசோக் செல்வன் நித்தம் ஒரு வானம் படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் ஆகாசம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ஆர் கார்த்திக் இயக்கிய நித்தம் ஒரு வானம்/ஆகாசம் இந்தியா முழுவதும் சென்னை, பொள்ளாச்சி, டெல்லி, கொல்கத்தா, சிக்கிம் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அபிராமி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு வித்து அய்யன்னா, படத்தொகுப்பு ஆண்டனி, இசை கோபி சுந்தர்.
இந்தப் படம் தவிர, பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவியாளர் ஜெய்குமாருடன் ஒரு படமும் அசோக்கிடம் உள்ளது.