தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரில் நல்லா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களைத் தயாரித்து தென்னிந்தியத் துறையில் பிரபலமானவர். ரவீந்தர் வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் நடிகை மகாலட்சுமியுடன் திருமணம் செய்துகொண்டபோது தொடர்ச்சியான படங்களைப் பகிர்ந்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் காலை 11 மணியளவில் நடந்த அந்தரங்க திருமண விழாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. படங்களைப் பகிர்ந்துகொண்டு, ரவீந்தர் ஒரு இதயப்பூர்வமான குறிப்பை எழுதினார்.
கடந்த மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஃபேட்மேன் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியை சோசியல் மீடியாக்களில் கடும் வாக்குவாத பிரச்சனையாக மாறியது.
இதுகுறித்து மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதியினர் பேட்டிகளை கொடுத்து வந்தனர், இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் திருமணம் பற்றி பேசும்போது ‘Karma is a b***h’ என குறிப்பிட்டு இருந்தார்.
வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி அந்த சர்ச்சையை பெரிதாகியவர் ரவீந்தர் தான். அந்த கர்மா தான் ரவீந்தருக்கு தற்போது திரும்பி வந்திருக்கிறது என வனிதா மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு ரவீந்தர் கூட ஒரு பதிவில் பேசியிருந்தார். அவர் (வனிதா) போட்ட ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார்.
அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று இருவரும் பதிலடி கொடுத்து பேசியுள்ள விசயம் வைரலாகி வருகிறது.
வாணி ராணி, ஆபிஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை மகாலட்சுமி. திருமண புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய்.. லவ் யூ அம்மு” என்று அவர் பதிவில் தலைப்பிட்டுள்ளார்.