தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் நடிகை மற்றும் தொகுப்பாளர் வி.ஜே.மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.சந்திரசேகர் தயாரித்த ‘விடியும் வரை காற்று’ என்ற திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்தனர்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர். ‘சுட்ட கதை,’ ‘நளனும் நந்தினியும்,’ ‘நட்பென்ன என்னவென்று தெரியுமா’ ஆகிய படங்கள் இவர் தயாரித்த படங்கள்.
இந்நிலையில், ரவீந்தர் திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி மகாலட்சுமி – ரவீந்தர் திருமணத்தை ட்ரோல் செய்தவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல்.
அதில் ஒருவர், “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க… பணம் பண்ற வேலை” என குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், மனசை மனிபர்ஸுகுள்ள ஒழிச்சி வெச்சிருக்காங்களா என ஒரு பெண் பதிவிட்டதை பார்த்து கடுப்பான காஜல், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“அது எப்டிங்க… நயன் விக்னேஷ கட்டிக்கிட்டாலும் நயன் தான் தப்பு. மஹா ரவிய கட்டிக்கிட்டாலும் மஹா தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தி” என விளாசியுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ரவீந்தரின் நண்பரும் தயாரிப்பு நிறுவன பங்குதாரருமான பிரதீப் ஆர் சின்னா இருவரும் இருவரின் படங்களையும் வெளியிட்டார்: இறுதியாக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் மிஸ்டர் பாஸ் பேபி. நீங்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன் என்று அவர் எழுதினார்.
மகாலட்சுமி முன்பு அனிலை திருமணம் செய்து கொண்டார், ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் 2019 இல் அவரை விவாகரத்து செய்தார். அவருக்கு முந்தைய திருமணத்திலிருந்து ஒரு மகனும் உள்ளார்.