விஜய் தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் தற்போது தொகுப்பாளராக மட்டுமல்லாமல் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் துவங்கியுள்ளார்.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்துவிட்டனர். இந்த கருத்து வேறுபாடு எதனால் இருவரும் இடையே கருத்து வேறுபாடு வந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் என்று திவ்யதர்ஷினியிடம் ஸ்ரீகாந்த் எத்தனையோ முறை கூறியுள்ளாராம். ஆனால், அதற்கு முடியவே முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டாராம் டிடி. அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆன இரண்டாவது வாரத்திலேயே கணவர் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டாராம் டிடி.
இது ஸ்ரீகாந்தின் குடும்பத்திற்கு சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி பிரபல நடிகருடன் டிடி சில கிசுகிசுவில் சிக்கின்னார். இவை அனைத்தும் தான் ஸ்ரீகாந்த் – டிடியின் விவாகரத்து காரணாம் என்று பல செய்திகள் கூறுகின்றன.