Thursday, April 25, 2024 8:02 pm

உங்க விஷயம் வனிதா அக்காக்கு தெரியுமா – ரசிகர் கமென்டிற்கு ரவீந்தர் கூறிய பதில்…என்ன தெரியுமா..?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வாணி ராணி, ஆபிஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகையாக மாறிய விஜே மகாலட்சுமி, தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சிப்ஸை திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இது அவர்களின் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். மேலும் இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் பிரபலமானது

அத்தோடு வனிதா – பீட்டர் பால் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பாலின் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.

எனினும் தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கை கொடுத்துள்ளார்.இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்ததை குறிப்பிட்டு ஏற்கனவே திருமணம் ஆனவரை வனிதா திருமணம் செய்தால் அது தவறு. ஆனால், நீங்கள் செய்தால் அது நியாயமா என்றெல்லாம் சமூக வலைதளத்தில் கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்டு வருகிறார்கள்.

மேலும் இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்..திருமணத்திற்கு பிறகு ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரன் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான் என்று கூறியுள்ளார். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து நான் அவ்வளவாக வெளியில் சொன்னது கிடையாது என்பதால் எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது.எனினும் அதேபோல வனிதா விஜயகுமார் விஷயத்தில் எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை கூறி இருப்பார். அதேபோல மகாலட்சுமி கூட என்னிடம் வனிதா அக்கா ஏன் இன்னும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்று கேட்டு இருந்தார்.

வனிதா விஜயகுமார் விஷயத்தில் அவர் எடுத்த முடிவு தவறானது என்று அவர் பின்னர் புரிந்து கொண்டார்.எனினும் அதேபோல அந்த விஷயத்திற்கு பின்னர் வனிதா விஜயகுமாரை நான் பேட்டி எடுத்து இருந்தேன். ஆனால், அந்த பேட்டியை இதுவரை நான் வெளியிடவில்லை. வனிதாவிற்கு எங்கள் திருமண செய்தி தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்று சொல்லி இருந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்