தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோல்டு’ படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், லேட்டஸ்ட்டாக படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போனது. திரைக்கு வர தயாராகி வரும் இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.
இந்த தகவலை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் ஃபேஸ்புக்கில், “எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக “தங்கம்” ஓணத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியிடப்படும். தாமதத்திற்கு எங்களை மன்னிக்கவும். “தங்கம்” வெளியாகும் போது எங்கள் வேலையின் மூலம் இந்த தாமதத்தை ஈடுசெய்யும் என்று நம்புகிறேன்.”
‘தங்கம்’ ஒரு ரொமாண்டிக் காமெடி, இது மொபைல் கடை உரிமையாளர் ஒரு புதிய காரை வாங்கிய பிறகு நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றி வருகிறது. அமல் அமீர், ரோஷன் மேத்யூ, கிருஷ்ணா சங்கர், தீப்தி சதி, பாபுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் மற்றும் விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.