வாணி ராணி, ஆபீஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வி.ஜே.மகாலட்சுமி, காதல் என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மணந்தார். அவரது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஒரு சிலருடன் சிப்ஸ்.
நடிகை மகாலக்ஷ்மி திருமணத்திற்கு பிறகு புது தாலியுடன் வெளியிட்ட அழகிய மார்டன் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நடிகை மஹாலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மகாலக்ஷ்மியை தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த கையுடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என்றும் ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மகாலக்ஷ்மி புது தாலியுடன் மார்டன் உடையில் தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார்.வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதை நீங்கள் நடக்கச் செய்தீர்கள் என் புருஷா என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இது அவர்களின் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.