வாணி ராணி, ஆபீஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வி.ஜே.மகாலட்சுமி, காதல் என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மணந்தார். அவரது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஒரு சிலருடன் சிப்ஸ்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இது அவர்களின் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
Producer #LibraProductions #RavindharChandrasekaran & actress #Mahalakshmi got married today. Congrats @fatmanravi & Maha. pic.twitter.com/fhh5T31Vru
— Sreedhar Pillai (@sri50) September 1, 2022
தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் இவர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் நமக்கு தெரியும். தனக்கென ஒரு யூடியூப் சேனலை வைத்துக்கொண்டு அதில் சர்ச்சையான சில கருத்துக்களை பேசி வருவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென்று திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் மகாலட்சுமியுடன் மணக்கோளத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து “மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கையில கிடைச்சிட்டா.ரவீந்தர் தயாரிப்பில் விதார்த், விக்ராந்த் நடிக்கும் ‘விடியும் வரை காற்று’ படத்திலும் மகாலட்சுமி நடிக்கிறார்.