சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். இதன்பின் படங்களில் நடிக்க துவங்கிய வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில், திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் திறமையான நடிகையாகி இருக்கும் வாணி போஜன் நடிகர் ஜாதியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அது என்னவென்றால், வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றுள்ளாராம். அப்போது வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். ஒரு முறை அல்ல இரு முறை அல்ல நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் வந்துவிடுகிறாராம்.
அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனிடம் ஜெய் இதே போல் தான் நடிகர் ஜெய் சில வருடங்களுக்கு முன் நடிகை அஞ்சலிடம் நடந்துகொண்டார். படப்பிடிப்பில் இருக்கும் பொழுது, இந்த காட்சியில் அஞ்சலி இப்படி நடிக்க மாட்டார், அப்படி நடிக்க மாட்டார் என்று சொல்லி சொல்லியே அஞ்சலியின் மார்க்கெட் சரிந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதே போல் தற்போது வாணி போஜன் கதை கேட்கும் பொழுது ஜெய் பக்கத்தில் இருந்தால், அது வாணி போஜனின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு ஒரு மைனஸ் தான் என்று பேசப்படுகிறது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.