தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு வரவிருக்கும் ‘பிரின்ஸ்’ மூலம் தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ளார். பிரபல உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷாப்கா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.
மரியா ரியாபோஷப்கா சிவா மற்றும் ‘பிரின்ஸ்’ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “பிரின்ஸ்” படத்தின் படப்பிடிப்பை முடித்தோம். இது அற்புதமான மனிதர்கள், நம்பமுடியாத படைப்பாற்றல் மற்றும் அன்பான குழுவுடன் ஒரு நம்பமுடியாத பயணம். நான் எப்போதும் இருந்தேன். நண்பர்களின் வட்டம். நான் உன்னை மிகவும் மிஸ் செய்வேன்?? இந்த நம்பமுடியாத அனுபவத்திற்கு நன்றி. பிரீமியரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!.
அதிகம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் சொந்தமாக படம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் சிவகார்த்திகேயன் . இவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில். அடுத்தடுத்து கடன் வாங்கி படம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுததி, பெரும் கடன் சுமைக்கு ஆளானார்.
சுமார் 100 கோடி ரூபாய் கடனாளியான சிவகார்த்திகேயனை, ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து கடன் கொடுத்தவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும் போது தலா 25 கோடி வீதம் நான்கு படத்தில் 100 கோடி ரூபாய் கடனை அடைத்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து அவருடைய நடிப்பில் வெளியான டான் படம் வெளியான போது, ஏற்கனவே சொன்னது போன்று முதல் தவணையாக 25 கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளார். ஆனால் அடுத்த சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வெளியான போது இரண்டாவது தவணையான 25 கோடி ரூபாய் கடனை செலுத்தவில்லை.
இதனால் கடன் கொடுத்தவர்கள் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வருடத்திற்குள் பாக்கி 75 கோடி ரூபாய் கடனை அடைத்து விட வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு தேதி குறித்துள்ளனர் கடன்காரர்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் சிவகார்த்திகேயனின் சூழல் அறிந்து பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சிவகார்த்திகேயன் அணுகியுள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்து படத்திற்கு கால் சீட் தருகிறேன், தன்னுடைய கடன் பிரச்சனையை தீர்க்க ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து தொடர்ந்து இரண்டு படங்களில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்னை நீங்க தான் காப்பாற்ற வேண்டும் என சரண்டரான சிவகார்த்திகேயனுக்கு உதவி கரம் நீட்டியுள்ளது சன் பிக்ச்சர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
We finished shooting the movie "Prince". It was an incredible journey with wonderful people, an incredibly creative and kind team. All the time I was in a circle of friends. I will miss you so much🤗
Thank you for this incredible experience. Looking forward to the premiere! pic.twitter.com/s4m7ZvvAX3
— Maria Riaboshapka (@RiaboshapkaM) August 20, 2022
‘பிரின்ஸ்’ படத்தை அனுதீப் இயக்குகிறார் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி சீசனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.