Saturday, April 20, 2024 2:31 am

பிரபல இயக்குனரின் காதில் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை !! மறுநாளே மாறிப்போன அவரது வாழ்க்கை!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே61 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். படக்குழுவினர் வைசாக்கில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், லேட்டஸ்ட்டாக வைசாக்கில் ஷூட்டிங் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடிகர் சிங்கம் புலி நடித்திருந்தார்.பலருக்கும் நடிகராக தெரியும் சிங்கம் புலி அடிப்படையில் ஒரு இயக்குநர்.அஜித் நடித்திருந்த ரெட் மற்றும் சூர்யா நடித்திருந்த மாயாவி திரைப்படங்களை சிங்கம் புலிதான் இயக்கியிருந்தார்.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த திரைப்படம் ‘உன்னைத் தேடி’. இந்தப் படத்தின் கதையை சுந்தர்.சி அவர்களின் இல்லத்தில் 7 நாட்கள் எழுதியவர் சிங்கம் புலிதானாம். அந்த படத்தின்போது கிட்டத்தட்ட 60 நாட்கள் நடிகர் அஜித்திடம் கதை சொல்வது வசனம் சொல்வது என்று அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பு சிங்கம் புலிக்கு கிடைத்ததாம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் அஜித்திற்கு இருந்ததாம். அப்போது கண்டிப்பாக இந்தப் படம் ஓடும் என்று சிங்கம் புலி கூற, அப்படி ஓடினால் என் படத்தை இயக்க உனக்கு வாய்ப்பு தருகிறேன் என சிங்கம் புலியிடம் கூறினாராம் அஜித்.

உன்னைத் தேடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதனுடைய நூறாவது நாள் விழாவை காமராஜர் மெமோரியல் ஹாலில் நடந்தபோது சிங்கம் புலியின் காதருகே சென்று,”நீ கூறியது போலவே படம் வெற்றியடைந்துவிட்டது. நாளை நிக் ஆர்ட்ஸில் சென்று உன்னுடைய கதையை சொல்லிவிட்டு வா என்று கூறினாராம். அப்படித்தான் ரெட் திரைப்படம் துவங்கியதாக சிங்கம் புலி கூறியுள்ளார்

தன்னுடைய இரண்டாவது படமான மாயாவியில் கூட நடிகர் சூர்யாவை அஜித் ரசிகர் போல காட்டியிருப்பார் சிங்கம் புலி. படம் இயக்கினாலும் அடுத்ததாக நான் கடவுள் படத்தில் இயக்குநர் குழுவில் பணியாற்றினார் சிங்கம் புலி. அதிலும் முதலில் அஜித் தான் கதாநாயகனாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் ரெட்ட சுழி உள்ள பைய கட்டிலுக்கு கெட்ட பய என்கிற வரி இருக்கும். அதனை அஜித்திடம் சிங்கம் புலி காட்டியதற்கு,”யோவ் ஏற்கனவே பல பிரச்சனை ஓடிட்டுக்கிட்ருக்கு இந்த மாதிரிலாம் ஏன் எழுதி வாங்கிட்டு வர” என்று கேட்டாராம். பின்னர் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அதனை காட்ட,”அவருக்கு எங்கையா ரெட்ட சுழி இருக்கு?”என்று ஒளிப்பதிவாளர் கேட்க, கிராபிக்ஸ் மூலம் நாம் வைத்துக் கொள்ளலாமா என்று சிங்கம் புலி கேட்டிருக்கிறார். அதற்கு,”யோவ் இந்த மாதிரில்லாம் பண்ணா உன்ன அஜித் அடிச்சிடப் போறாரு, சும்மா இருயா” என்று ஒளிப்பதிவாளர் கூறியதாக ரெட் திரைப்படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை சிங்கம் புலி கூறியுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏகே 61’ இந்த தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது படத்தை பிற்பகுதிக்கு தள்ளியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்