பொதுவாக திருமணம் ஆன தம்பதிகள் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சினையில் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதற்கு காரணமே ஒருவருக்கு ஒருவர் புரிதல் குறைவாகவே உள்ளது தான்.
திருமணத்திற்கு பின் ஏற்படும் சண்டைகள் பிரச்சினைகள் பல காவல் நிலையத்திற்கு செல்கிறது. அந்த வகையில், மனைவி கணவனை கொடுமை செய்யும் சம்பவம் தான் இங்கு ஏற்பட்டு இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் கண்டேயா கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
புதுமண தம்பதிகள் மகிழ்ச்சிக்காக குடும்பத்தினர்கள் தனி ஒரு வீடு எடுத்து தந்துள்ளனர். ஆனால், புதுமண தம்பதிகள் திருமணம் ஆன நாளில் இருந்தே, சண்டையிட்டு வந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் மனைவி தொல்லை தாங்க முடியவில்லை என போலீசாரிடம் சென்றுள்ளார் கணவர். அப்போது போலீசாரிடம் அவர், முதலிரவில் இருந்தே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
என் மனைவி, சரக்கு அடிக்கிறாள். கஞ்சா புகைக்கிறாள். போதை பொருட்கள் நிறைய பயன்படுத்துகிறார் எனவும், இரவு நேரத்தில் குடித்துவிட்டு இரவு 12 மணிக்கு என்னை எழுப்பி தொந்தரவு செய்கிறாள்.
இதனால் எங்களுக்குள் சண்டை உண்டாகிறது. என் தலையை பிடித்து சுவற்றில் மோதி என்னை தாக்கியுள்ளார். எனக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டி காயம் ஏற்பட்டுவிட்டது. எனக்கு என் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுகிறாள் என கதறியுள்ளார்.
இதை எல்லாம் புகார் எழுதி என் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகாரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மனைவி நடந்து கொண்டதை வைத்து பார்க்கும்போது, மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதாக கணவர் கூறுகிறார்.