மும்பையில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தாலும், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் செவ்வாய் இரவு தாமதமாக தனக்கு நேர்மறை சோதனை செய்ததாக அறிவித்தார் மேலும் “எனது அருகாமையிலும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் தயவுசெய்து உங்களைப் பரிசோதித்து பரிசோதிக்கவும்” என்று வலியுறுத்தினார்.
இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை ட்விட்டரில் அமிதாப் பச்சன் உறுதி செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் மூத்த நடிகரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் உஞ்சாய்’, ‘குட்பை’, ‘புராஜெக்ட் கே’ மற்றும் ‘தி இன்டர்ன்’ உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகவுள்ள ‘பிரம்மாஸ்திரா பார்ட் 1’ அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
T 4388 – I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also .. 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2022
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தன்னுடன் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தொற்றில் இருந்து அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லை பாலிவுட் பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சனை தொடர்பு கொண்டு அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.