- Advertisement -
ஆசிரியர்களும், மாணவர்களும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்றும், மாணவர்கள் தமிழில் இனிஷியலை எழுத மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை எழுதும் போது, அவர்களின் முதலெழுத்தை தமிழில் எழுத தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அனைத்துப் பதிவேடுகளிலும் தமிழில் பெயர்களைப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை குறிப்பிட்டு, கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
- Advertisement -