Thursday, April 18, 2024 10:47 am

தனது பேரனிடம் ரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை !! மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா பின்னணி இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோலிவுட் நடிகர் தனுஷும், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பெருமைக்குரிய பெற்றோர். அதற்கான காரணம்? அவர்களின் மூத்த மகன் யாத்ரா, தனது பள்ளியின் புதிய விளையாட்டு கேப்டனாக பதவியேற்றதால், அவரது பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா யாத்ரா மற்றும் இளைய மகன் லிங்காவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக பிரிந்ததாக அறிவித்த பிறகு, சமூக ஊடகங்களில் இதேபோன்ற வார்த்தைகள் மூலம் அவர்கள் ஒன்றாகக் காணப்படுவது இதுவே முதல் முறை. கோலிவுட் பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி தர்ஷனாவும் படத்தில் காணப்படுகின்றனர். உண்மையில், தர்ஷனா தனது இன்ஸ்டாகிராம் கதையில் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதன் பின்பு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும், குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்ன ரஜினிகாந்த் விருப்பத்தை இருவரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். தனுஷ் ஒருபக்கம் சினிமாவில் பிசியானார் மறுபக்கம் ஐஸ்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்து அடுத்த தான் இயக்கும் புதிய படங்களின் ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளில் தீவிரமாக இருந்து வந்தார்.

ஆனால் பிரிந்த ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியினர் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கான எந்த ஒரு முயற்சியும் நீதிமன்றம் வாயிலாக எடுக்கவில்லை. இதனால் இவர்கள் எந்த நேரமும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் ஏற்கனவே தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ரஜினிகாந்த்.

இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பின்பு தான் நிம்மதி பெருமூச்சு அடைந்தார். ஆனால் இந்த நிம்மதி சில காலம் கூட அவருக்கு நீடிக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் மூத்த மகள் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தது ரஜினிகாந்தை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. மேலும் இதனால் தன்னுடைய கோபத்தை அவ்வப்போது தன்னுடைய மனைவி மகள்கள் மீது வெளிப்படுத்திக் கொண்டே இருந்து வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், எனக்கு பெயர், புகழ், பணம் என அளவுக்கு அதிகமாக இருந்தாலும், என் வாழ்க்கையில் பத்து சதவீதம் கூட நிம்மதி இல்லை என தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தி இருந்த. ரஜினிகாந்த் இந்த பேச்சுக்கு மூத்த மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை விட்டு பிரிந்தது தான் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கக்கூடியவர்கள், தந்தையின் மன உளைச்சலை புரிந்து கொண்டு மீண்டும் கணவருடன் இணைய வேண்டும் என ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வந்துள்ளனர். அதே நேரத்தில் தனுஷ்யிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ரஜினியை மீண்டும் வேதனை அடைய செய்ய கூடாது என்கிற முடிவுக்கு வந்த தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர்.

மீண்டும் இணைந்து வாழ்வதற்கு முன் வந்தனர். இந்த நிலையில் தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் விளையாட்டு துறையில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பங்கேற்ற புகைப்படம் தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. உள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் பிரிந்த தம்பதியினர் நாங்கள் மீண்டும் இணைந்து விட்டோம் என்று வெளிப்படுத்துவதற்காக தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மேடையில் உருக்கமாக பேசிய அந்தஒரு வார்த்தை தான் பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைத்துள்ளது என கூறப்படுகிறது

ஐஸ்வர்யா இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இயக்கிய ஒரு இசை வீடியோவை வெளியிட்டார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வாரம் வெளியானது. சமீபத்தில், அவர் ஹாலிவுட் அறிமுகமான ‘தி கிரே மேன்’ படத்தின் மூலம் அதிக கவனத்தைப் பெற்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்