எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது நடித்து வரும் நடிகர் அஜித்குமார், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் இருந்து தன்னை எப்போதும் ஒதுக்கி வைத்து வருகிறார். பல சந்தர்ப்பங்களில், நட்சத்திர நடிகர் தனது விளம்பரதாரர் சுரேஷ் சந்திரா மூலம் தனது ரசிகர்கள் அல்லது ஊடகங்களுக்கு செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அஜீத் எந்த வடிவத்திலும் ஒலி மாசுபாட்டிற்கு எதிராக பொதுநலன் கருதி ஒரு திடீர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“Protect your ears”
Unconditional love always – Ajith pic.twitter.com/qd543owHDt— Suresh Chandra (@SureshChandraa) August 20, 2022
அஜித் எப்போதும், தனது வேலை நடிப்பது மட்டுமே, என்று மற்ற விஷயங்களில் கலந்துகொள்வதை பெருபாலும் தவிர்த்து விடுவார். தனது பட விளம்பரங்களில் கூட அஜித் கலந்துகொண்டதில்லை. சமூக வலைதள பக்கம் அறவே ஆகாது.
அப்படி ஏதேனும் செய்தி வெளியுலகிற்கு சொல்ல வேண்டுமானால், தனது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மூலம் பகிர்ந்து விடுவார். அப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் காதுகளை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் என ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. இது பற்றி விசாரிக்கையில், அஜித்திற்கு சத்தம் சுத்தமாக பிடிக்காதாம். ஷூட்டிங்கில் கூட அதிக சத்தம் வருவதை விரும்ப மாட்டாராம். அதனால், மைக் எல்லாம் எனது பட ஷூட்டிங்கில் வேண்டாம் என தவிர்த்துவிட்டாராம்.
அதுவும், பாம் வெடிப்பது, துப்பாக்கி சத்தம் ஆகியவை சத்தமில்லாமல், அதாவது ஹாலிவுட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பம். துப்பாக்கி சுடும் போது அதிர்வலை மட்டும் வரும் சத்தம் அந்த ஷூட்டிங்கில் வராது. எப்படியும் ரீரெக்கார்டிங்கில் தான் சத்தம் சேர்க்க போகிறீர்கள். பிறகு ஏன், ஷூட்டிங்கில் அந்த அதிக சத்தம் என கேட்டுள்ளாராம். அதனால், ஹாலிவுட் பாணியை பயன்படுத்துங்கள் என படக்குழுவினரிடம் வற்புறுத்தியுள்ளார் அஜித் என்கிறது சினிமா வட்டாரம்.
அஜீத் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்தின் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘ஏகே 61’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். அவர் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்திற்காக கைகோர்க்கவுள்ளார்.