Tuesday, April 16, 2024 7:02 pm

50 வயதில் மீண்டும் காதல் தோல்வியா? திரிஷாவின் கோபமான பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

த்ரிஷா பிரபலமான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர், மேலும் அவர் இரண்டு தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை ஆளுகிறார். அவர் ஒரு செயலில் சமூக ஊடக பயனராகவும் இருக்கிறார், மேலும் அவர் தனது ரசிகர்களை அவள், அவரது செல்லப்பிராணிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் படங்களுடன் அடிக்கடி நடத்துகிறார். சமீபத்தில் த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் கதை ரசிகர்களை யூகிக்க வைத்துள்ளது. “நச்சுத்தன்மையுள்ளவர்கள் உங்களுடன் பேசுவதை நிறுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது குப்பை தன்னைத்தானே வெளியே எடுத்தது போல் உள்ளது” என்று நடிகை தனது இன்ஸ்டாகிராம் கதையில் எழுதினார். அவரது பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் அவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை திரிஷா, கடந்த 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த படம் ஜோடி. இப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருந்தார்.

இதையடுத்து அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து விக்ரம் ஜோடியாக சாமி, விஜய்க்கு ஜோடியாக கில்லி என வரிசையாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் திரிஷா.

அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இன்றளவும் குறையாத அழகுடன் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் திரிஷா.

தற்போது இவர் நடிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

சினிமாவில் வெற்றி நாயகியாக திகழும் திரிஷா இருமுறை காதல் தோல்வியை சந்தித்து உள்ளார். முதலில் தெலுங்கு நடிகர் ராணா மீது காதல் வயப்பட்ட திரிஷா, சில ஆண்டுகளிலேயே அவரை பிரிவதாக அறிவித்தார். பின்னர் சினிமா தயாரிப்பாளரான வருண் மணியனை காதலித்தார்.

இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்ததால் திருமணம் நடக்காமல் போனது. இந்த இரு காதல் தோல்விகளுக்கு பின்னர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இந்நிலையில், அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், “வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது. குப்பையே தன்னை வெளியே தூக்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

திரிஷாவின் இந்த கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்