Sunday, December 3, 2023 12:35 pm

சென்னையில் கஞ்சா வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கார்த்திக் என்ற 22 வயது இளைஞரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் நான்கு பேரை கிரேட்டர் சென்னை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், குறித்த இளைஞர் கஞ்சா மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை தொடர்பான சம்பவங்களின் தொடர்ச்சியே இந்தக் கொலை என்றும், கார்த்திக்கைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கொண்ட கும்பல், போதைப் பொருளைத் தங்கள் பிரதேசத்தில் விற்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை பிற்பகல் கார்த்திக் சிவானந்தா நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கும்பல் வழிமறித்ததாக போலீஸார் தெரிவித்தனர். அம்பத்தூர் காவல் நிலையத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ரத்த வெள்ளத்தில் துடித்த கார்த்திக்கை அம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சிவரேசன், முருகன், அப்துல் மஜீத் மற்றும் ராஜசேகர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்