இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் கடவுள் இல்லை’. படப்பிடிப்பிற்கான லாக்டவுன் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பிறகு, 2020 நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் தனது பகுதிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.
சமுத்திரக்கனி மற்றும் சாக்ஷி ஸ்டைலான அவதாரங்களில் காணப்படுவதோடு, சில கனமான ஆக்ஷன் காட்சிகளையும் செய்ய வாய்ப்புள்ளது. பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் உடனான படங்களைப் பகிர்ந்துகொண்ட சாக்ஷி, “நான்கடவுள்இல்லை – எனது அடுத்த படத்திற்கு @dir_sac சாருடன் இன்று டப்பிங் செய்தேன். நேர்மையாக, உங்களுடன் பணிபுரிந்த ஒரு சிறந்த கற்றல் அனுபவம் சார்! உண்மையிலேயே ஒரு உத்வேகம்” என்று பதிவிட்டுள்ளார்.
இப்படம் சமூக அக்கறை கொண்ட ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை இனியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.