உதயநிதி ஸ்டாலின் நடிப்பதோடு மட்டுமின்றி தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பல பெரிய படங்களை தமிழகத்தில் வாங்கி திரையரங்குகளில் வெளியீட்டு வருகிறார். அடுத்தாக திருச்சிற்றம்பலம், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, சர்தார் உள்ளிட்ட படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியீடுகிறது.
இப்படி தொடர்ந்து பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வந்தால் மத்த விநியோகதஸ்தர்கள் நிலை என்ன ஆவது என்று ஒரு பக்கம் கேள்விகள் எழுந்தாலும் கூட, மற்றோரு பக்கம் பலர் தயாரிப்பாளர்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் தான் படங்களை கொடுக்க விரும்புகிறார்களாம்.
ஏனென்றால், வாங்கிய கணக்கு வசூல் என அனைத்தையும் கனகச்சித்தமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கொடுத்துவிடுமாம். இதனால் அவர்களிடம் கணக்கு சரியாக வருகிறது. எனவே அந்த நிறுவனத்திடமே படங்களை கொடுக்கலாம் என விரும்பி ஒப்பந்தம் செய்கிறார்களாம்.
இந்த நிலையில், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியீட்டு வருவதை பார்த்த அவரது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உதயநிதியை அழைத்து தொடர்ந்து படங்களை வாங்கி வெளீயீடாதே.. முக்கியமான படங்கள் இருந்தால் மட்டும் வாங்கி வெளியீடு.. பெரும்பாலான படங்களை வெளீயிடாதே என்று கண்டிஷன் போட்டுள்ளாராம்.
கண்டிஷன் போட்ட பாசக்கார தந்தைகாக உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்து கொடுத்த உதயநிதி தனது தந்தை சொன்ன கண்டிசன்க்காக ஓகே சொன்னதால் தமிழ் சினிமாவின் நிலை என்ன ஆகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.