Sunday, April 14, 2024 5:45 pm

பாக்யராஜ் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர், இவர் போன்று திரைக்கதை வடிவமைப்பதில் இது வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை வடிவமைப்பதில் வல்லவர் என்றே சொல்லலாம், 80, 90 காலகட்டத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்த பாக்யராஜ் அவர் சொந்த இயக்கத்தில் திரைக்கதை, வசனம், எழுதி நடித்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம்.

இயக்குனர் பாக்கியராஜ் – பூர்ணிமா தம்பதியினருக்கு சாந்தனு, என்கிற மகனும்,சரண்யா என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தனு கதாநாயகனாக நடித்த அணைத்து படங்களும் தோல்வியை மட்டுமே கொடுத்தது, தந்தை பாக்யராஜ் சாதனைகளில் 10 சதவிகிதம் கூட மகன் சாந்தனு சினிமாவில் சாதிக்கவில்லை என்று சொல்லலாமல். தற்பொழுது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் மனைவியுடன் யூ டுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் சாந்தனு.

பாக்கியராஜ் தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்கிற படத்தில் கதநாயகியாக அறிமுகம் செய்தார். இந்த படம் தான் நடிகை சரண்யாவுக்கு முதல் மற்றும் கடைசி படமாக இருந்தது. இதன் பின்பு என்ன ஆனார் சரண்யா என எந்த தகவலும் வெளியாகம இருந்து வந்த நிலையில். சரண்யா வெளிநாட்டில் படிக்கும் போது அங்கே ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். ஆனால் உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் ஏமாற்றியுள்ளார்.

இதனால் காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்த சரண்யா, காதலன் ஏமாற்றிய துயரத்தை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சரண்யாவை காப்பாற்றி. அறிவுரை வழங்கி வீட்டோடு பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர். தனக்கு திருமணமே வேண்டாம் என பிடிவாதமாக இருந்து வந்துள்ளார் சரண்யா.

இந்நிலையில் அக்கா சரண்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கையில் தம்பி சாந்தனுவுக்கு திருமணம் முடிந்தது. இதன் பின்பு நடன இயக்குனர் ஒருவருக்கு பாக்யராஜ் மகள் சரண்யாவை இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் திருமணம் ரகசியமாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.

தற்போது ஆடை, அணிகலன் சம்பந்தப்பட்ட ஷாப்பிங் மற்றும் ரீரைல்ஸ் தொழிலை செய்து வருகிறார். அவர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் சரண்யாவின் தம்பி சாந்தனு.

- Advertisement -

சமீபத்திய கதைகள்