மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள் தடுப்பு கிளப் தொடங்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கிளப்களை உருவாக்குவதற்கு என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் குழுக்கள் உதவும்.
போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறை, கலால் மற்றும் சுகாதாரம் போன்ற பங்குதாரர் துறைகளுடன் ஒருங்கிணைக்க, மாவட்ட நிர்வாகம் போதைப்பொருள் ஒருங்கிணைப்புப் பிரிவையும் திறக்கும்.
போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இரண்டு கல்லூரிகள் மற்றும் பல பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
நிகழ்ச்சிகளுக்கு கோவை ரேஞ்ச் டி.ஐ.ஜி., எம்.எஸ். முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.பதரிநாராயணன், சமீரன் உடன் இருந்தனர்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகள், நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு கிளப்களில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் தொடர்பு எண்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும்.