சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இருமகள்களா ஐஸ்வர்யா, செளந்தர்யாவுக்கு சிறப்பாக திருமணம் செய்து பார்த்தார். ஆனால் முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்று செளந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாரத்து செய்து, பின் விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
செளந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் உள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமீபத்தில் 18 வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 3 பேரப்பிள்ளைகளோடு கிடைக்கும் நேரத்தில் செலவு செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
மன அழுத்தத்தில் இருந்து வந்த சூப்பர் ஸ்டாருக்கு தற்போது ஆறுதல் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இரண்டாம் மகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாகி இருக்கிறாராம். அவரின் வலைக்காப்பு நிகழ்ச்சி கூடிய சீக்கிரமே உறவினர் மட்டும் பங்குபெறும் படியாக நடக்கவுள்ளதாம்.
வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் கூறியுள்ள நிலையில் இந்த மாத இறுதியில் அந்நிகழ்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு விசாகன் மூலம் செளந்தர்யா கர்ப்பமாகி இருக்கிறார்.