Tuesday, April 23, 2024 3:02 pm

தலித்துகள் படுகொலை: குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் ஆயுள் தண்டனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2018-ம் ஆண்டு கோயில் திருவிழாவில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திங்கள்கிழமை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கும், ஆவாரங்காடு உயர் சாதி இந்துக்களுக்கும் இடையே நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது ‘முதல் மரியாதை’ பெறுவது தொடர்பான பிரச்சினையில் 2018 மே 28 அன்று இரவு அந்தக் கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

யாருக்கு முதல் மரியாதை என்ற பிரச்னையில், காயமடைந்த 5 பேரில் ஆறுமுகம் (65), ஏ சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தனசேகரன் (32) உயிரிழந்தார்.

மொத்தம் 33 பேர் கொலை மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், காவலில் இருந்தபோது இருவர் இறந்தனர், மூன்று சிறுவர்கள் மற்றும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். மீதமுள்ள 27 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்