நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்த சென்னை காவல்துறையின் ஆயுதப்படை காவலர் ஒருவர், தனது ஆயுதத்தால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த காவலர் மதுரை செல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
செந்தில் குமார் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதாரங்களின்படி, அவர் குளியலறையில் தன்னைப் பூட்டிக்கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பணியில் இருந்த மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, சக ஊழியர் இறந்து கிடந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்ட் 10ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
AR constable Senthil Kumar , shoot himself to death at JN indoor stadium in #Chennai @dt_next @chennaipolice_ #ChessOlympiad
— Raghu VP / ரகு வி பி / രഘു വി പി (@Raghuvp99) August 3, 2022