பொதுவாக உணவில் காரத்துக்காக பயன்படுத்தப்படும் பச்சை மிளகாயில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்-சி சத்து உள்ளது, மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
ஆனால், அந்த பச்சை மிளகாயை நம்மால் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது பச்சை மிளகாயை என்னதான் ப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்தாலும் கூட அவை சில தினங்களில் அழுகி போய்விடும்.
தற்போது சில வழிமுறைகளை பின்பற்றி பச்சை மிளகாயை எப்படி ஒரு மாத காலம் வரையிலும் கெடாமல் வைத்துக்கொள்ளலாம் எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.முதலில் நன்றாக இருக்கும் பச்சை மிளகாயையும், வீணாப்போன பச்சை மிளகாயையும் பிரித்து தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அதனை சுத்தமாக கழுவி காற்றுபுகாத பாட்டிலில் ஒன்றின் அடியில் டிஸ்யூ பேப்பரை வைத்து அதன்மீது பச்சை மிளகாயை வைத்து, மேற்பரப்பில் மற்றொரு டிஸ்யூ பேப்பரை வையத்து இறுக்கமாக மூடிவிட வேண்டும்.
எனவே, பச்சை மிளகாயை இப்படி நீங்கள் பாதுகாத்து வந்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப்போகாமல் புதிது போன்றே வைத்திருக்கலாம். அதேநேரம் வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் டிஸ்யூ பேப்பரை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய் மட்டுமின்றி புதினா இலைகள், கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
பச்சை மிளகாயை பாதுகாக்க மற்றொரு வழியும் இருக்கிறது. முதலில் பச்சை மிளகாய்களை தரம் பிரித்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனை சுத்தமாக கழுவியெடுத்து வைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அந்த அரைத்தெடுத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை ஒரு ட்ரேயில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் உணவு பொருட்களை மூட பயன்படுத்தப்படும் க்ளிங் பிலிம் எனும் பேப்பரை கொண்டு அந்த ட்ரேயை மூடி வைத்துவிட வேண்டும்.
பச்சை மிளகாய் பேஸ்ட் உள்ள இந்த ட்ரேயை ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒரு இரண்டு மணி நேரத்திற்கு வைத்து கூல் செய்யவேண்டும். பின் அதனை எடுத்து ப்ரீசர் சேப் பையில் காற்றுபுகாமல் வைத்துவிட வேண்டும்.
இப்படி நீங்கள் செய்தால் நீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாயை கெட்டுப்போகவிடாமல் புதிதானது போல பயன்படுத்திக்கொள்ளலாம்.