Sunday, April 2, 2023

கேவலம் பணத்திற்காக மானத்தை அடகு வைத்த பவி டீச்சர்.. கூடவே இருந்து ஒத்து ஊதிய பார்த்திபன்

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் உருவான இரவின் நிழல் திரைப்படம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் அளவுக்கு அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த திரைப்படம் தற்போது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிரிகிடா இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சேரி மக்கள் குறித்து சில கருத்துக்களை பேசியதற்காக இவருக்கெதிராக பல எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தது.

இதனால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்தப் பிரச்சினையே இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் அவர் படத்தில் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்ட ஒரு காட்சியை பற்றிய சில உண்மைகளை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருந்தார். கதைக்கு தேவைப்பட்ட காரணத்தால் தான் அப்படி நடித்திருந்ததாக அவர் பலமுறை பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த காட்சியில் பிரிகிடா ஸ்கின் போன்ற ஒரு ஆடையை அணிந்துதான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்த பிறகு தற்போது அவரே இந்த உண்மையை பற்றி வாய் திறந்திருக்கிறார். மேலும் அதை கிராபிக்ஸ் மூலம் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், வசூலுக்காகவும் இப்படி கேவலமான ஒரு விஷயத்தை பட குழு செய்துள்ளதாக பேசி வருகின்றனர்.

மேலும் பார்த்திபன் போன்ற மிகப்பெரிய இயக்குனர் இது போன்ற வேலைகளை செய்யலாமா என்றும் அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். பட விளம்பரத்திற்காக இப்படி ஒரு விஷயத்திற்கு பார்த்திபனும் ஒத்து ஊதியிருக்கிறார் என்ற பேச்சு கோலிவுட்டில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய கதைகள்