தற்போதைய சூழ்நிலையலில் கொரோனா வைரஸிற்கு அடுத்தப்படியாக அச்சுறுத்தும் ஒரு தொற்றாக மங்கி பாகஸ் மாறியுள்ளது.
மங்கி பாக்ஸ் என்னும் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் கிட்டதட்ட 2 முதல் 3 வாரங்கள் வரை மனிதர்களுடைய உடலில் இருக்கும். தலைவலி, உடல் வலி , சரும எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.
இந்த அறிகுறிகள் லேசாக தோன்றும்போதே தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது அந்த உணவுகள் என்னென்ன
புதினா மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சரிசெய்ய உதவுவதோடு இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற தொற்றுக்களில் இருந்து மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கிறது. புதினாவை டீ, சட்னி, சூப், சாலட் என பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
பிரிஞ்சி இலையானதுஆன்டி – இன்பிளமேட்டி, ஆன்டி – இன்பிளமெட்டரி, டையூரிக் மற்றும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
துளசியில் ஆன்டி – இன்பிளமேட்டரி, ஆன்டி பாக்டீரியல், ஆன்டி – ஆக்சிடண்ட் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறதுது. அதனால் மங்கிபாக்ஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றான தலைவலியை சரிசெய்ய உதவும்.
மங்கிபாக்ஸ், கோவிட் போன்ற தொற்றுக்களால் பாதிக்கப்படும்போதும், வராமல் தடுப்பதற்கும் செலீனியம் அதிகமுள்ள பிரேசில் நட்ஸ், முட்டை, கடல் உணவுகள், சிக்கன் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோயெதிப்பு மண்டலமும் வலுவாகிறது. அதோடு இதிலுள்ள ஆன்டி – ஆக்சிடண்ட் நம்முடைய உடலை பலமாக்குவதோடு நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்றது.