Thursday, March 28, 2024 10:03 pm

உண்மையிலேயே திருச்சி சமயபுரம் கோவிலுக்கு வந்தாரா அஜித் !! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜீத்குமாரை காண வந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்த நடிகை யாஷிகா ஆனந்த்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி நேற்று மாலை சமயபுரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடிகர் அஜீத்குமார் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது.

இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜீத்குமாரை காண ஆவலுடன் திரண்டனர். தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 9மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அப்போது பிக்பாஸ் புகழ் மற்றும் திரைப்பட நடிகை யாஷிகாஆனந்த் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்