பயில்வான் ரங்க நாதன் , இவர் நடிகராக மட்டுமல்லாது பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகின்றார்.
இவர் நடிகர் நடிகைகளைப் பற்றி தவறாகப் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். இருப்பினும் இவர் கூறும் விடயங்களைப் பார்ப்பதற்கு என்றே இவரது யூடியூப் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை போஃலோ செய்கின்றனர்.
இவர் நடிகர் நடிகைகளைப் பற்றி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அத்தோடு இவர் செய்வது தவறான விடயம் என பல பிரபலங்களும் கூறி வருகின்றனர். இருப்பினும் அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை.
இந்த நிலையில் பயில்வான் ரங்க நாதனே நடுரோட்டில் வெளுத்து வாங்கி இருக்கிறார் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் .இவர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் பார்த்திபனின் அம்மாவாக நடித்திருந்தார்.
மேலும், இந்த படத்தில் பிணமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணமாகவும் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த காட்சி சற்றும் ஆபாசமாக திரையில் தோன்றவில்லை. ஆனால், அனைத்து நடிகைகள் குறித்தும் கொச்சையாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயர் குறித்தும் இரவின் நிழல் படத்தில் இவர் நடித்த நிர்வான காட்சி குறித்தும் படு ஆபாசமாக பேசி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் பயில்வான் ரங்கநாதன் உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த ரேக்கா நாயர் பயில்வான் ரங்க நாதனை வெளுத்து வாங்கி இருக்கிறார். கை ஓங்கும் அளவிற்கு சென்று விட்டார் ரேகா நாயார்.நான் அம்மனாக நடிப்பேன் அதைக் கேட்க நீ யார்..? நான் உன்னுடைய பிள்ளையா.. இல்லாவிடில் பொண்டாட்டியா நீ யார் என கடும் கோபத்தில் கேள்வி கேட்டதோடு நீ வந்து விளக்குப் பிடித்தியா. என பலஅவரை பேசவிடாமல் தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
இப்படிஎல்லாம் நடிகைகளை பற்றி பேசி பொழப்பு நடத்தும் பயில்வானுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். மேலும் இதுபோன்ற கருத்துக்களை இனி பேசமாட்டார் என்று நினைப்போம்.