Friday, April 26, 2024 3:08 am

தெருவில் சுற்றி திரிந்த 29 நாய்களை பரிதாபமாக சுட்டு கொன்ற கொடுமை !! நடந்தது என்ன? கண்கலங்க வைக்கும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தெருவில் சுற்றி திரியும் 29 நாய்களை இரண்டு பேர் இரக்கம் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடான கத்தாரில், தங்களது மகன்களை நாய்கள் கடித்ததாக சிலர் நாய்கள் இருந்த தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் 29 நாய்களை சுட்டுக் கொன்றனர்.

சில நாய்கள் காயமடைந்தன என தெரிவித்துள்ளனர். இது குறித்து மிருகநல அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கண் முன்னே நிகழ்ந்திருக்கிறது. கும்பலாக வந்த ஆண்களில் இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் விலங்குகள் மிட்பு அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இதனால், சுடப்பட்ட நாய்களில் ஒரு குட்டி மட்டும் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் சமுக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்