வெளிநாட்டு மாடல் நடிகையாக இருந்து தமிழில் ஆதிகால காதல் படத்தில் பிளேபாய் நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தவர் தான் வெள்ளக்காரி நடிகை. பின் பிரம்மாண்ட இயக்குனரின் ரோபோட்டிக் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
ஸ்டார் நடிகருடன் நடித்து ஹிட்டான அம்மணி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வந்தார். இடையில் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவருடன் ரகசிய காதலில் இருந்து கர்ப்பமாகினார். திருமணமாகாமலே இப்படியானதை பலர் விமர்சித்ததால் அம்மணி அவரை மோதிரம் மாற்றி நிச்சயம் செய்தார்.
பின் குழந்தையும் பிறக்க நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளக்காரி நடிகை அவரை விட்டு பிரிந்து தன் அம்மாவுடன் குழந்தையை பார்த்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அம்மாவாகவும் சிறிய வயதில் தனியாக இருப்பதால் பிரபல நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்த அம்மணி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தையும் லீக் செய்து வெளியில் சுற்றி வருகிறார்.
விரைவில் திருமணம் செய்தால் தான் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்த குழந்தையின் அப்பா என்று கூற முடியும். அதனால் தான் அம்மணி அவரை கல்யாணம் செய்ய காத்திருக்கிறாராம். அப்பாவின் இனிஷியலுக்காக இப்படி ஒரு முடிவா என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.