‘ஏகே 61′ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார். தற்போது, ’ஏகே 61’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தெலுங்கு நடிகர் அஜய் நடிகர்களுடன் இணைந்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் சில இரக்கமற்ற வில்லன் வேடங்களில் நடித்துள்ள அஜய், ‘ஏகே 61’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குழுவுடன் இணைவார், இது புனேவில் நடக்க உள்ளது.
அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.
இந்நிலையில் இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இன்று (20.07.2022) மதியம் வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. வெளிவட்ட சாலையில் இயக்குனர் எச்.வினோத் படக்காட்சிகளை இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் அஜீத் – விஷ்ணுவர்த்தன் இணையும் படம் விரைவில் உருவாகும் என்று கோலிவுட் வட்டாரங்களால் கூறப்பட்ட நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பில்லா படத்தின் மூன்றாம் பாகத்தின் கதையை தயார் செய்யுமாறு அஜித், விஷ்ணுவர்த்தனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும் இதனை அடுத்து அவர் இந்த படத்தின் கதை திரைக்கதையை தயார் செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் படம் முடிந்ததும் விஷ்ணுவர்தனுடன் அஜித் இணைந்து பில்லா 3 படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அஜித் நடித்த படம் மூன்றாம் பாகமாக உருவாகுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.