தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் ஒரு முறை தனது நண்பருடன் பைக்கில் லைசன்ஸ் இல்லாமல் சென்றுள்ளார். அப்போது போலீஸ் நிற்பதை பார்த்த விஜய்யின் நண்பர், விஜய்யை வேகமாக பைக் ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார்.
ஆனால், விஜய்யோ சரியாக போலீசிடம் சென்று வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது கையில் லைசன்ஸ் இல்லாமல் போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் விஜய். அப்போது, விஜய்யின் நண்பர் போலீசிடம் சென்று, இவர் பெயர் விஜய், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்று கூறியுள்ளார்.
அதன்பின் அந்த போலீஸ் விஜய்யை மன்னித்துவிட்டுள்ளார். தந்தை இயக்குனராக இருக்கப்போய் அன்று விஜய் போலீசிடம் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த சம்பவம் விஜய்யின் கல்லூரி நாட்களில் நடந்தது என்பதை விஜய்யின் நண்பர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.