தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்திய கிளையாக உச்சத்தை தொட்டவர் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தியவர்.
அவரை போன்று மக்கள் மத்தியில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. 300 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி நடத்திய காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ரஜினி நண்பர், கமல் டீச்சர் என்று ஸ்ரீபிரியா கூறியிருந்தார்.
கமல் ஹாசன் நான் மயக்கம் போட்டு விழுந்தாலும் அவர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார் என்றும் கூறியுள்ளார். இதற்கு நடிகை ராதிகா, எனக்கு பிரசர் பிரச்சனை இருப்பதால் அடிக்கடி லோ பிபி வந்துவிடும்.
அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன். இதனை தெரிந்த கமல் என்னிடம் இப்போ மயக்கம் போட்டு விழு, நான் வெளியில் போகனும் என்று கெஞ்சினார். ஆனால் என்னால் முடியாது என்று கூறியிருந்தார்.
அதன்பின் மற்றொரு நாள் பிபி வந்து மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். அப்போது எழுந்து பார்க்கும் போது கமல் என்னிடம் வந்து சனியன் சொல்லும் போது விழல என்று கலாய்த்துவிடுவார் என்று காமெடியா ராதிகாவும், ஸ்ரீபிரியாவும் கூறியுள்ளார்.