இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் மக்களின் மிகப்பெரிய ஆதரவு பெற்று வரும் படம் இரவின் நிழல். ஏ ஆர் ரகுமான் இசையில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் நல்ல வரவேற்பும் விமர்சனமும் பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக பவி டீச்சர் என்று அழைக்கப்படும் பிரிகிதா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார். இதனால் பிரிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். ஆடையில்லாத காட்சியில் நடிப்பதால் பெரும்பாலும் அந்த மாதிரி நடிக்க தான் இயக்குனர்கள் கதையை கூறி வருகிறார்களாம்.
அதேபோல் பாலியல் சம்பந்தமான தொல்லைகளும் வருகிறதாம். இதனால் அவரது நம்பரையும் மாற்றியிருக்கிறார் பிரிகிதா. சமீபத்தில் சேரிக்கு போனால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே கேட்க முடியும் என்று சர்ச்சையாக பேசி பின் மன்னிப்பும் கேட்டுள்ளார் பிரிகிதா.