தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஜோடியாக வாலி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பர், முகவரி, குஷி, தூள், திருமலை, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த குஷி படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஜோதிகாவிற்கு தமிழில் மெர்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம். படத்தில் நடித்ததற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தது.
அந்த வகையில், கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற (Filmfare Awards) பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் நடிகை என விஜய்க்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்ததற்காக வாங்கி இருந்தார். அந்த விருதை நடிகர் அஜித் குமார் தான் அவருக்கு வழங்கி இருந்தார்.
இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், ஜோதிகா அஜித்திற்கு ஜோடியாக வாலி படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். அதைப்போல அவருடைய கையில் இருந்து தான் முதல் பிலிம்பேர் விருதையும் பெறுள்ளார்.