Thursday, April 25, 2024 8:32 pm

பணத்திற்க்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பிணத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலையரசன் உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருப்பதை கண்ட பெற்றோர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையம் சென்று தன் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ ஆர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணன், கலையரசனின் தந்தை, தாய் புஷ்பா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் கொடுத்த புகாரில் 45 நாட்கள் ஆகியும் கலையரசன் மர்மமான முறையில் இருந்ததையும் இது குறித்து போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பணத்திற்காக சிலர் கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் எனவும் கூறியிருந்தார்கள். எனவே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்