தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அணைத்து மொழிகளும் கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு இன்னும் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம்.
இதனை தொடர்ந்து இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்து புஷ்பா 2 திரைப்படத்திலும் நடிக கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் இவர் எச்டி இந்தியாவின் மோஸ்ட் ஸ்டைலிஷ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு அங்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக சென்றுள்ளார்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமாக, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் கவர்ச்சியை மிஞ்சும் விதமாக ராஷ்மிகா மந்தனா அந்த விருது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் ரசிகர்க ஷாக்கில் உள்ளனர்.
அங்கு பத்திரிகையாளர்கள் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் கன்னத்தில் கை வைத்து ஒரு செய்கை செய்வதை ராஷ்மிகாவை செய்ய சொல்லியுள்ளார்கள். அவருக்கு க்யூட்டாக அதை செய்துள்ளார். மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் இது எல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.