நடிகர் கார்த்தி நடிக்க வருவதற்கு முன் USல் வேலை செய்துகொண்டிருந்ததை நாம் அறிவோம். அப்போது ஒரு நாள் நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட வெளியே சென்றுள்ளாராம். ஒரு காரில் சில நண்பர்களும் மற்றொரு காரில் கார்த்தி மற்றும் சில நண்பர்களும் சென்றுள்ளார்கள்.
அப்போது நண்பர்கள் அனைவரும் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். காரில் அதிவேகமாக சென்று போலீசிடம் சிக்கிய நடிகர் கார்த்தி.. அவரே கூறிய உண்மை தகவல் | Karthi Arrested By Police For Fast Driving In Road அவர்கள் சென்ற சாலை அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்கள்.
இதை கவனித்த போலீஸ் உடனடியாக அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின், நீதிபதியின் உத்தரவின்படி $250 டாலர் ஃபைன் கட்டிவிட்டு வெளியேறியுள்ளார்கள். இந்த தகவலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தான் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.